Thursday, April 12, 2007

"ரிலையன்ஸ் பிரஸ் முற்றுகை" மே 1 சென்னை





1 comment:

Anonymous said...

பெயர்: அசுரன்

பெயர் காரணம்: சில ஆயிரம் வருட பொருளாதார, கலாச்சார அடக்குமுறைக்கெதிரான
அடையாளமாக எனது எழுத்துக்களை முன்னிறுத்தி இன்று அந்த அடக்குமூறையும்,
அதற்கெதிரான யுத்தமும் தீர்மானகரமான ஒரு நிலையை நோக்கி சென்று
கொண்டிருப்பதை பிறருக்கு குறிப்பால் உணர்த்தும் பெயராக இந்த அசுரன்.
பார்ப்ப்னியத்தின் பரம்பரை எதிர் என்ற அடையாளத்துக்காகவும்.

வயது: சுமார் ஒரு 27 இருக்கும்.

கல்வி: Under Graduation (Marxian Phiolospophy), Diplomo (Marxian
Economy), Post Graduation (Marxian Socio Economy) தற்போது படித்துக்
கொண்டிருக்கிறேன்.

பணி: அரசியல் விழிப்புணர்வுக்காக, மக்களின் பிரச்சனைகளை புரிந்து கொண்டு
அவற்றை இணையத்தில் பிரச்சாரம் செய்து வருகிறேன்.

தமிழ்மணத்தை தாண்டி திண்ணையில் இரண்டு அல்லது மூன்று கட்டுரைகளும்,
கீற்றுவில் ஒரு சில கட்டுரைகளும் எழுதியுள்ளேன். இது தவிர சில
குழுமங்களில் எழுதி வருகிறேன். இணையத்தில் எழுத தூண்டுகோலாக இருந்தது
இங்கு பிற்போக்கு சக்திகள் கேள்வி கேட்க ஆளின்றி பொய்களையும்,
புரட்டுகளையும் பரப்பி வந்ததும், உலகமய பொருளாதாரத்தில் வளப்பமுறும்
நடுத்தர வர்க்கத்தின் ஒரு சிறு பகுதி, தமது சம்பளத்திற்க்கு மதிப்பை
கொடுக்கும் பெரும்பான்மை இந்திய மக்களின் வாழ்வாதார பிரச்சனைகள் குறித்து
கிஞ்சித்தும் கவலையின்றி சுயநலத்திலும், பிழைப்புவாதத்திலும் மூழ்கி
இருப்பதுமே ஆகும். இந்த இரண்டையும் எதிர்த்தே இங்கு எனது எழுத்து
ஆரம்பித்தது. இந்த நோக்கத்தை கடந்து எழுதும் தேவை இன்று வரை
ஏற்ப்படவில்லை. அதற்கான தகுதியும் எனக்கு இன்னும் கிட்டவில்லை.

கம்யுனிச குடும்ப பின்னணியில் பிறந்தாலும் கூட எனது கல்லூரி இறுதி ஆண்டு
வரை என்னை கம்யுனிஸ்டு என்று பிறர் சொல்வதை மறுத்தே வந்துள்ளேன். ஏனேனில்
எனக்கு அப்பொழுது கம்யுனிசம் தெரியாது. தெரிந்து கொள்ளும் விருப்பமும்
இருந்திருக்கவில்லை அந்த காலத்தில். பிறகு, வெகு சன ஊடகங்களில் உண்மைக்கு
மாறாக, யாதார்த்ததில் நான் பார்க்கும், அனுப்விக்கும் ஒரு உலகத்திற்க்கு
மாறாக பொய்யான சித்திரத்தையே எல்லா இடங்களிலும் முன்னிறுத்தும் முரன்பாடு
எனக்குள் ஒரு தேடலுக்கான வித்தை ஊன்றியது. மக்களை, அவர்களீன் வாழ்க்கையை
யார் பேசுகிறார்கள் என்ற கேள்வியும், அப்படி பேசாமலேயே அந்த மக்களை
ஊடகங்கள் சுரண்டுவது குறித்த கோபமும் இந்த தேடலின் விதைகளாக இருந்தன.

அந்த தேடல் மக்கள் பிரச்சனைகளையும் ஊடகங்களின் மக்கள் விரோத தன்மையையும்
புரிந்து கொளவதில் வந்து நின்றது. இந்த நேரத்தில்தான் கம்யுனிசம்
அறிமுகமானது. கம்யுனிசத்தை கற்றுக் கொள்வதற்கு மனரீதியாக தயாரான
நேரத்தில் கம்யுனிசம் அறிமுகமானது நல்ல விசயம்தான்.

இங்கு எழுதும் பிறரைப் போல எனக்கு இலக்கியத்திலோ அல்லது இலக்கணத்திலோ
அதிக அறிமுகம் கிடையாது. எனது வாசிப்பை எனது கேள்விகளே தீர்மானிக்கின்றன.
எனது கேள்விகள் நடைமுறைப் பிரச்சனைக்கு பதில் தேடுவதாக இருப்பதால்
அதற்க்கு தோதானவற்றையே வாசிக்கிறேன். வரலாறூ, பொருளாதாரம், அரசியல்,
தத்துவம் இவைதான் நான் அதிகம் வாசித்தவை. கலை இலக்கிய வாசிப்பனுபவம் கூட
இந்த தேவைக்கு உட்பட்டவைதான். ரசனைக்காக என்று வாசிக்க தோன்றவில்லை.
தமிழ்மண அனுபவம் எனக்கு நல்ல விசயங்களை கற்றுக் கொடுத்த அனுபவமாக மனதில்
நிற்கிறது. எனது நிலைப்பாடுகளின் மீது வைக்கப்பட்ட பல்வேறு கேள்விகள்
புதிய விசயங்களை கற்றுக் கொள்ள உதவின. ஆயினும், தமிழ் மண செயல்பாடுகள்
என்னிடம் ஏற்படுத்திய நெகடிவ் விளைவுகளையும் நான் குறீபிட்டே தீர
வேண்டும்.

சுய திருப்தியையும், ஒரு அல்பவாதிக்குரிய குணங்களையும், தற்பெருமையையும்
ஊக்குவிக்கும் சூழல் ப்ளாக்குகளில் நிலவுகின்றன. இது தவிர்க்க முடியாதது.
இவற்றினால் நானும் பாதிக்கப்பட்டேன். மீண்டு வந்தேன். எனது இந்த கெட்ட
அனுபவங்களை இங்கு குறிப்பிடுவதன் மூலம் சக வலைப்பதிவர்கள் இந்த
பிரச்சனைகள் குறித்த எச்சரிக்கையுடன் செயல்பட ஏதுவாகும் என்றூ
நம்புகிறேன். குறிப்பாக சமீபகாலத்தில் கம்யுனிசம் குறித்தும், முற்போக்கு
அரசியல் குறித்தும் எழுத வந்துள்ள பல இளம் வலையுலக தோழர்கள் இந்த
பண்புகள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்ப்தே இங்கு
வெளிப்படையாக இவற்றை அறிவிப்பதின் நோக்கம்.

வாழ்த்துக்கள்,
அசுரன்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது