Thursday, April 12, 2007

பண்ணைக் கூலிப்பாட்டு

நுகத்தடி உனதல்ல
பூட்டியகாளைகளும் உனதல்ல
உழுத பங்கு உனதல்ல
சவுக்கும் உனதல்ல
ஏரு மட்டுமா , விளையும் பூமி மட்டுமா?

வெள்ளைக் காளை உனதல்ல
மச்சக் காளை உனதல்ல
மாட்டுக் கொட்ட உனதல்ல
வெக்கப் போரும் உனதல்லஏரு
மட்டுமா, விளையும் பூமி மட்டுமா?

ஏரிக்கரை உனதல்ல
கரை மரமும் உனதல்ல
முறம் உனதல்ல
ஒரு கோப்புகூட உனதல்ல
ஏரு மட்டுமா, விளையும் பூமி மட்டுமா?

கெணறு உனதல்ல
குளமும் உனதல்ல
கறந்த பாலு உனதல்ல
முளைச்ச பயிரும் உனதல்ல
ஏரு மட்டுமா, விளையும் பூமி மட்டுமா?

மழை உனதல்ல
காவாயும் உனதல்ல
அறுவா உனதல்ல
அறுவடையும் உனதல்ல
ஏரு மட்டுமா, விளையும் பூமி மட்டுமா?

கறுத்த மேகம் உனதல்ல
பருவங்களும் உனதல்ல
மேச்சநிலம் உனதல்ல
களத்து மோடும் உனதல்ல
ஏரு மட்டுமா, விளையும் பூமி மட்டுமா?

குந்தி இருந்தா அண்ணே
குதிரைதான் ஓட்டுவான்
கொதிச்செழுந்து ஒன்னா நின்னா
எல்லாம் நடக்குமப்பா
தைரியமா நீ சொல்லுப்பா

நீ இல்லாம எள்ளுகூட மொளச்சு வராது
கூலியில்ல எங்களுக்கு நிலமே சொந்தம்
ஏரு மட்டுமா, விளையும் பூமி மட்டுமா
நாடு முழுசுக்கும் நீதான் சொந்தக்காரம்பா

குந்தி இருந்தா அண்ணே
குதிரைதான் ஓட்டுவான்
எதிர்த்து நாம நின்னமுன்னா
கஷ்டமும் பட வேணாம்
கண்ணீரும் விடவேணாம்
கொதிச்செழுந்து ஒன்னாநின்னா
எல்லாம் நடக்கும்ப்பா !

- செரபண்டராஜூ
(ஜூலை 10, 1972)

No comments:

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது