Monday, October 29, 2007

மருத்துவமே இல்லையடா ! ஆனா போலிகளை பற்றி கவலைப்பட வைச்சுட்டேங்களடா !!

நேற்று சன் நியூஸ் சேனலில் மருத்துவ துறையில் போலி மருத்துவர்கள் அதிகரிச்சுட்டார்கள் எனவும், அதுனால ஏற்படுகின்ற பாதிப்புகள் என்னவென்றும் அலசினார்கள்.
..
இதனை பார்க்கும் போது...

மக்களுக்கு மருத்துவமே கிடைப்பதில்லை. அனைத்தையும் வியாபாரமாக்கிவிட்டார்கள்.
..
உரிமையாக நிலைநாட்டப்பட வேண்டியவற்றில் ஒன்றான மருத்துவத்தை லாபகரமான தொழிலாக மாற்றிட்டானுங்க இந்திய ஏகாதிபத்திய கைக்கூலி ஆட்சியாளர்களான ஓட்டு பொறுக்கி அரசியல்வாதிகள்.

இன்றைக்கு வாழ்வதற்கே படித்த ஒரிஜினல் மருத்துவர்களிடம் கிட்னி விற்று வாழுங்கள் என்ற நிலைக்கு கொண்டு வந்துட்டானுங்க.
..
நாடு முழுவதும் புகையிலை தடை செய்கின்ற அதிகாரத்தை வந்துகிட்டு என்ன சொல்கிறார் அதுனால தான் 40 % நோய் வருகிறது அதுனால புகையிலை பொருட்களின் மீது மண்டையோடு போடப்போறேன் என்கிறார் குறைந்தபட்சம் மக்களாலே கூட தேர்ந்தெடுக்கப்படாத ஒரு இந்திய சுகாதார துறை அமைச்சர்.
..
கோக்கை அனுமதிச்சு கொண்டே அதை உபயோகிக்காதீர்கள் என தன் தொலைக்காட்சியில் விளம்பரம் செய்கிறது ராமதாஸ் குடும்பம்.
..
(எல்லா ஓட்டுப்பொறுக்கிகளையும் ஏன் சொல்லவில்லை என யோசிக்காதிங்க...மற்ற பதிவிகளை படித்து தெரிந்து கொள்ளவும்.)
..
இப்படி அனைத்தையும் விற்று வந்து மருத்துவம் பார்க்கின்ற சில பேருக்கு நாங்க போலிகள்களை வைத்து கொல்லுவோம் என்கின்றனர் இந்த மறுகாலனியாதிக்க தாசர்கள்.

வாழ்வதையே பெரிய விஷயமாக ஆகப் பெரும்பாண்மை இந்திய மக்களை இன்று உருவாக்கி வருகின்றனர் இவர்கள்.

No comments:

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது