Friday, March 14, 2008

தில்லைச் சிற்றம்பலம் ஏறியது தமிழ்! ஆலயத் தீண்டாமை அகலும் வரை ஒயாது எமது சமர்!






பிரச்சார இயக்கம்

தில்லை கோவிலுக்குள் பார்ப்பன‌ வெறியாட்ட‌ம் போட்டு வ‌ந்த‌ தீட்ஷிதர்களின் சின்டைப்பிடித்து இழுத்து வ‌ந்து த‌மிழக மக்களின் முன்பு அவ‌ர்களின் பார்ப்பன வெறியை தெள்ள‌த்தெளிவாக அம்பலப்படுத்தின‌
ம.க‌.இ.க, வி.வி.மு, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு,
ம‌னித‌ உரிமை பாதுகாப்பு மைய‌ம்

ஆகிய புர‌ட்சிக‌ர‌ அமைப்புக‌ள். க‌ட‌ந்த‌ வார‌ம் முழுவ‌தும் இது தான் முக்கிய அரசியல் செய்தியாக ஊடகங்களில் வெளியானது. த‌மிழில் தேவாரம் திருவாசகம் பாட‌ப்ப‌ட்ட‌து என்ப‌து வெற்றியின் முத‌ல் ப‌டி தான், தீட்ஷித காலிப்ப‌ய‌ல்க‌ளை முற்றாக கோவிலிலிருந்து வெளியேற்றி அப்புற‌ப்ப‌டுத்துவது தான் அடுத்த‌ ப‌டி இத‌ற்கான‌ பிர‌ச்சார‌ இய‌க்க‌ம் நாளை முத‌ல் த‌மிழ‌க‌ம் முழுவ‌தும் வீச்சாக‌ ந‌ட‌க்க‌ உள்ள‌து அதன் பிறகு சிதம்பரத்தில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டமும் நடக்க உள்ளது.அதற்கான நிகழ்ச்சி நிரல் அழைப்பிதழ் இரண்டு நாட்களில் வெளியாகும். சிதம்பரம் தீட்சித கும்பலுக்கு எதிரான, பார்ப்ப‌ன‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌த்திற்கு எதிரான‌ இந்த‌ சூறாவ‌ளி பிர‌ச்சார‌த்தில் பார்ப்ப‌ன‌ எதிர்ப்பாள‌ர்க‌ள்,முற்போக்கு எண்ண‌ம் கொண்ட‌வ‌ர்க‌ள் அணைவரும் ப‌ங்கேற்று ஆதரவளிக்க வேண்டும், நேரடியாக, அதாவது பிர‌ச்சார‌ வேலைகளில் பங்கேற்று உதவ முடியாத ந‌ண்ப‌ர்க‌ள் இந்த‌ பிர‌ச்சார‌ இய‌க்க‌த்திற்கு நிதியுத‌வி அளிக்க‌லாம். இந்த‌ இய‌க்க‌த்திற்கான‌ அறிமுக‌ பிர‌சுர‌ம் முத‌ல் க‌ட்ட‌மாக‌ இங்கே வெளியிட‌ப்ப‌டுகிற‌து.
..

No comments:

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது