Monday, September 3, 2007

"இறந்தவன் நல்லவனல்ல; கொன்றவன் கெட்டவனுமல்ல" நீதி கேட்கிறாள் ஒரு தாய்!

நீதிமன்றங்கள் என்பவை உண்மையில் அநீதிமன்றங்கள்தான் என்று நாம் அரசியல் ரீதியில் பலவாறாக அமபலப்படுத்தி எழுதியிருக்கிறோம். சொந்த வாழ்க்கை அனுபவத்திலிருந்து இந்த உண்மையினை முகத்திலெறியும் ஒரு கடிதத்தை இங்கே வெளியிட்டுள்ளோம்.

இந்தக் கடிதத்தை எழுதியிருப்பவர் ஒரு தாய். இவரது மகன்கள் கொலைக் குற்றத்திற்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். கொலையுண்டவ்னோ அண்ணன்.

தனது இரண்டு மகன்களும் செய்தது குற்றமல்ல,நியாயமான கொலைதான். அவர்களை விடுவிக்க வேண்டும் என்று கோரி நீதிமன்றத்திற்கு அந்தத் தாய் அனுப்ப விழையும் முறையீடும், வாசகர்களிடம் நீதி கேட்டு அவர் எழுதிய கடிதமும் வெளியிடப்பட்டுள்ளன.

ஊர் பெயர் விவரங்களையெல்லாம் உள்ளது உள்ளபடியே அவர் எழுதியிருந்த போதிலும் அவற்றை மாற்றியுள்ளோம்;

கிழே க்ளிக் செய்து படிக்கவும்...
.
..
..
..
..
நீங்கள் சொல்வதில் நியாயம் இருக்கிறது. ஆனால் அது சட்டப்படி குற்றாமாச்சே" - என்ற வசனத்தை வழக்கறிஞர்கள் வாயிலிருந்தும், போலீசார் வாயிலிருந்தும் நாம் எவ்வளவு முறை கேட்டிருப்போம், நியாயத்துக்குப் புறம்பான ஒரு சட்டம்; அந்தச் சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்படும் நீதி; நீதியால் தண்டிக்கப்படும் நியாயம்!

யாருக்கு நீதி வழங்குகிறது இந்தத் தண்டனை யாருக்கு நிவாரணம் வழங்குகிறது இந்தத் தீர்ப்பு எந்த ஒழுங்கை நிலைநாட்டுவதர்காக அந்த இரண்டு பேரும் சிறை வைக்கப்பட்டிருகிறார்கள் இவை நீத்மன்றம் விடை தரமுடியும் கேள்விகள். நீதிவழங்கு நெறியின் முகத்தில் காறி உமிழும் கேள்விகள்.

நீதிமன்றத்தில் பேச தாய்க்கும் உரிமை இல்லை; தாய் மொழிக்கும் உரிமை இல்லை. புரியாத மொழியில் (ஆங்கிலத்தில்) விசாரனை; புரிகின்ற மொழியில் (கை விலங்கு) தண்டனை ! நீதிமன்றத்தில் "தமிழ் வேண்டும்" என்பதும் "நீதி வேண்டும்" என்பதும் இரு வேறு கோரிக்கைகளல்ல என்பதை இதைவிடத் தெளிவாக, இதைவிட மனதைத் தொடும் விதத்தில் வேறேப்படிச் சொல்ல முடியும்.

இந்த சட்டம் மக்கள் விரோதமானது என்பது மட்டுமல்ல, நீதிமன்ற அமைப்பின் வடிவமும் மக்கள் விரோதமானது. எனவேதான் சொல்கிறோம் இதற்குத் தீர்வு மக்கள் நீதிமன்றம்தான்.

"நீதி" எனும் சொல்லை மட்டும் கேள்விக்குள்ளாக்கவில்லை இந்தக் கடிதம். எது குற்றம் என்ற கேள்வியையும் எழுப்புகிறது. ஒரு குடும்பத்தை நாசமாக்கிய சமூக விரோதியைக் கொல்வதில் என்ன தவறு என்ற கேள்வியை எழுப்புகிறது. குடும்பத்துக்குப் பொருந்தும் இந்த நியாயம் சமூகத்திற்கும் பொருந்தும் என்பதை விளக்கத் தேவையில்லை.
நன்றி புதிய கலாச்சாரம் மார்ச் 2000

No comments:

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது