Wednesday, September 26, 2007

பசுத் தோல் போர்த்திய பன்றிகள்.

ஆர்.எஸ்.எஸ் பற்றி "பசுத் தோல் போர்த்திய பன்றிகள்" என்ற தலைப்பில் தோழர் ராஜாவனஜ் அவர்களின் தளத்தில் முன்பு வந்த இந்த பதிவு தற்போது சூழ்நிலையில் அவசியம் கருதி மீண்டும் மறுபதிப்பாக வெளியிடுவது சிறப்பாக இருக்கும் என்பதால்....
....
மற்றவர்கள் பயந்து விலகி ஓடிப் போகும் படியான காரியங்களில் வலுக்கட்டாயமாக தலையை நுழைத்துக் கொள்வது என்பது விடலைப் பருவ குணங்களில் ஒன்று. நான் மட்டும் என்ன விதிவிலக்கா? என் பதினேழாம் வயதில் நானும் அப்படித்தான் இருந்தேன். வித்யாசமான அனுபவங்களும் சாகசக் கதைகளும் கனவுகளை நிரப்பிக் கொண்டிருந்த காலம் அது. அந்த சமயத்தில் எப்படியாவது ஏதாவது ஒரு சாகசத்தில் நானும் பங்கு பெற வேண்டும் என்று ஏங்கிக் கொண்டிருந்தேன். அதே சமயத்தில் தான் 1998ல் கோவை குண்டு வெடிப்பு நடந்தது. அது ஏன் நடந்தது, ஏன் சில முஸ்லிம்கள் அப்படி ஒரு காரியத்தில் ஈடுபட்டார்கள், சமுதாய அமைதியின்மைக்கு அரசியல் காரணங்கள் என்ன என்றெல்லாம் யோசிக்கும் பக்குவத்தில் அப்போது நான் இல்லை. எனக்கு அரைகுறையாக புரிந்ததெல்லாம் முஸ்லிம்கள் குண்டு வைத்து பலரை கொன்று விட்டனர் என்பது தான்.
..
இது நடந்து அடுத்து ஒரு வாரத்தில் நான் RSSல் இனைந்தேன். அங்கே எப்படி பொறுப்புகளில் உயர்ந்தேன் என்றெல்லாம் முன்பொரு பதிவில் சொல்லியிருகிறேன். இன்னொரு முறை விளக்க வேண்டிய அவசியம் இல்லை. RSSல் இருந்து நான் விலகிய சமையத்தில் அதற்கு அரசியல் காரணங்கள் இல்லை. எனக்கு தனிப்பட்ட முறையில் ஏற்பட்ட சலிப்பும் வெறுமையும் தான் காரணம். பின்னர் எனக்கு ஏற்பட்ட இடதுசாரி அரசியல் அறிமுகம்(நன்றி:- புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம், மற்றும் தோழர் G.K.ராமசாமி (CPI-Tamil Nadu water board தொழிற்சங்கம்)), வேறு சில பரிமானங்களை சுட்டிக் காட்டியது. என் அனுபத்தில் நான் படித்த பாடங்களும் புரிந்து கொண்ட உண்மைகளும் மிக மிக முக்கியமான ஒன்று. எங்காவது என்னைப் போல இன்னுமொரு விடலைச் சிறுவன் என்னைப் போலவே முட்டாளாவதை இப்பதிவு தடுக்குமானால்- அதுவே இப்பதிவின் வெற்றி.
.
இனி.........
.
ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங் (RSS)
...
சொன்னதும் சொல்லாததும்
...
சொன்னது : RSS ஒரு தேசபக்தி இயக்கம்
சொல்லாதது : தேசபக்தி என்பது பாசிஸ்டுகளின் முகமூடி. மக்கள் எப்போதும் பயத்திலும் யாரோ ஒரு எதிரி தங்களைத தாக்குவதற்கு தயாராய் இருக்கிறான் என்ற நினைப்பிலும் ஆழ்ந்திருப்பது பாசிஸ்டுகளின் அரசியல் ஆசை நிறைவேற மிக அவசியமான ஒன்று. உண்மையான தேசப்பற்று சமுதாயத்தின் அனைத்து பிரிவு மக்களின் உயர்வையும் பற்றி கவலைப் படும், அதே நேரம் போலி தேசவெறி பிரச்சினைகளை பார்க்க விடாமல் கண்களை மறைக்கும். வலதுசாரி தேசபக்தி உண்மை நிலையை மறைத்து பொய்யான புள்ளி விபரங்களையும் தேசம் முன்னேறுவதாய் பொய்ப் பிரச்சாரம் செய்வதையுமே நம்பி இருப்பது. ஹிட்லர் ஜெர்மனியின் உயர் பதவிக்கு உயர்ந்தது இவ்வாறே. வலது தேசபக்தி=தேசியவெறி.பொதுவாக ஒரே மொழி ஒரே கலாச்சாரம் ஒரே மதம் ஒரே நாடு என்று uniformityஐ உயர்த்திப் பிடிப்பது தான் பல்வேறு பெயர்களில் உள்ள சங்கபரிவாரங்களின் மறைமுக செயல் திட்டம். வெளியில் சொல்லிக் கொள்ளாவிட்டாலும் இது நாஜிக்களின் பாசிஸ்டுகளின் செயல் முறையே. தேசிய வெறியூட்டப் பட்ட மக்களும் அதிகாரிகளும் எப்படி செயல் பட்டார்கள் என்பதை இரண்டாம் உலகப் போரின் போது நமக்கு ஹிட்லரின் ஜெர்மனி உணர்த்தியது.
.
சொன்னது : RSS ஒரு ஜனநாயக அமைப்பு.
.
சொல்லாதது : இந்த பொய்யை உடைக்க RSSன் அதிகார அடுக்குகளை புரிந்து கொள்வது அவசியம். சங்கத்தில் இரு வித பொறுப்பாளர்கள் உண்டு க்ரகஸ்த கார்யகர்தர்கள், பிரச்சாரக்குகள். இதில் பிரச்சாரக்குகள் திருமண வாழ்க்கையில் இல்லாமல் முழு நேரமாக சங்கப் பணி செய்பவர்கள், கிரகஸ்தர்கள் இல்வாழ்வில் உள்ளவர்கள். கீழ் நிலையில் கட் நாயக்( ஷாக்கா ஒருங்கினைப்பாளர்) முக்யசிக்ஷக் ( ஷாக்கா நடத்துபவர்) மண்டல் கார்யகர்த்தர்கள் ( ஷாக்கா பஞ்சாயத்து அளவிலானது), மண்டல் (மூன்றுக்கு மேற்பட்ட பஞ்சாயதுகள் உள்ளடக்கியது), கண்ட ( மூன்றுக்கு மேற்பட்ட மண்டல்கள்) தாலுக்கா கார்யகர்த்தர்கள்( மூன்றுக்கு மேற்பட்ட கண்ட) ஜில்லா கார்யகர்த்தர்கள் ( மூன்றுக்கு மேற்பட்ட தாலுக்கா) விபாக் கார்யகர்த்தர்கள்( மூன்றுக்கு மேற்பட்ட ஜில்லாக்கள்) பிராந்த கார்யகர்த்தர்கள் ( ஒரு மாநிலம் ) ஷேத்திரிய கார்யகர்த்தர்கள் ( மூன்றுக்கு மேற்பட்ட மாநிலங்கள்) உட்ச கட்டமாக அகில பாரத பொறுப்பாளர்கள். சரி இதில் எப்படி பொறுப்பாளர்கள் நியமிக்கப் படுகிறார்கள்?. வருடத்துக்கு ஒரு முறை கார்ய காரணி மண்டல்( செயல் வீரர்கள் கூட்டம்) கூடி அந்தந்த பகுதிக்கான பொறுப்பாளர்களை ‘அறிவிப்பார்கள்’. ஸ்வயம்சேவக்குகள்(தொண்டர்கள்) மத்தியில் வாக்கெடுப்போ மற்றும் அது போன்று ஜனநாயக முறையோ கிடையாது. இந்த வைபவத்தில் வீட்டோ அதிகாரம் கொண்டவர் பிரச்சாரக்குகள் மட்டுமே. அகில பாரத கார்ய காரணி மண்டலிலும் பொறுப்பாளர்கள் நியமிப்பது இப்படித்தான். உதாரணம் தற்போதய தலைவர் சுதர்சன்.
.
சொன்னது : RSS பார்ப்பனர் அமைபு அல்ல. வெகுஜன இயக்கம்.
.
சொல்லாதது : மேலே உள்ள அதிகார அதிகார அடுக்குகளை கூர்ந்து கவனியுங்கள், இதில் தாலுக்கா அளவில் சில பார்ப்பனர் அல்லாத பிரச்சாரக்குகள் உண்டு. மேலும் ஜில்லா அளவில் வெகு சில பார்ப்பனர்கள் உண்டு அதன் மேலே உள்ள விபாக் அளவில் பார்ப்பனர் அல்லாத பிரச்சாரக்குகள் அபூர்வம். மாநில அளவிலோ அகில பாரத அளவிலோ பார்ப்பனர்கள் பிரச்சாரக்குகளாகவோ சர்கார்யவாகவோ இருப்பதே இல்லை. சரி கீழ் நிலையில் உள்ள பிரச்சாரக்குகள் பிற்காலத்தில் என்னவாகிறார்கள்? அவர்கள் அனேகம் பேர் சங்கத்தில் இருந்து விலகி விடுகிறார்கள்( offcourse தங்கள் இளமைக் காலம் அனைத்தையும் தொலைத்து வீணாக்கிய பின்). இதில் அகில பாரத தலைவரை(சர்சங்க சாலக்) தவிர்த்து மற்ற தலைவர்கள் எல்லோரும் அந்தந்த பகுதியில் பிரபலமாக உள்ள பிரமுகர்களே தலைவர்களாக இருப்பர். இவர்களுக்கு சுத்தமாக எந்த ஒரு அதிகாரமும் கிடையாது நம் மாநில கவர்னர்களைப் போல. ஆக, எந்த ஒரு முடிவும் உயர் மட்ட அளவில் பார்ப்பன சர்கார்யவாகாலும் சர்சங்கசாலக்காலும் எடுக்கப் பட்டு கீழ் மட்ட அளவில் பார்ப்பனர் அல்லாதோரைக் கொண்டு செயல் படுத்தப் படும்.
.
சொன்னது : RSS இயற்கைப் பேரழிவு காலங்களில் மக்கள் பணியாற்றி உள்ளது.
.
சொல்லாதது : இது இன்னொரு முகமூடி. இதனால் யாராவது பயன் அடைந்திருந்தால் அவர்கள் கிருஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் தான் நன்றி சொல்ல வேண்டும். இதை சமுதாயப் பணி என்று சொல்வதை விட ஏட்டிக்கு போட்டி பணி என்றால் மிகப் பொருத்தமாக இருக்கும்.ஜில்லா அளவிலான கார்ய காரணி மண்டல்கள் பலவற்றில் நான் பங்கேற்று உள்ளேன் அதில் அவர்கள் வாசிக்கும் அறிக்கையின் ஒரு பகுதி சேவா காரியங்களால் ஏற்படுத்தப் பட்டுள்ள ஷாக்காக்களின் என்னிக்கை பற்றியது. ஆக, RSSன் சேவாகாரியங்கள் அனைத்தும் உள்நோக்கம் கொண்ட, சுயநலம் சார்ந்த காரியங்களே.
.
சொன்னது : இந்துத்துவம் இந்தியாவிற்கு இயல்பான ஒரு வாழ்வு முறை தத்துவம்.
.
சொல்லாதது : இந்துத்துவம் இயல்பானதல்ல செயற்கையாக தினிக்கப் படும் தத்துவம். இந்தியா என்பது பல தேசிய இனங்கள் இனைந்த கதம்பம். பல் வேறு மொழி, கலாச்சாரங்களும், வாழ்க்கை முறையும் கொண்டது. எந்த ஒரு சாம்ராச்சியமும் பல்வேறு பட்ட கலாச்சாரங்கள் தம்முள் செழிப்போடு இருப்பதை விரும்புவதில்லை. சாம்ராச்சியங்களின் சவுகரியத்துக்காக ஆதி சங்கரன் இங்கே இருந்த பல்வேறு வழிபாட்டு, மத முறைமைகளை அழித்து விட்டு சனாதன தர்மம் என்ற பெயரில் ஒரே நூலில் இனைக்க முற்பட்ட அதே காரியத்தைத் தான் இப்போது இந்துத்துவம் என்ற பெயரில் செய்து முடிக்க RSS முற்படுகிறது. சமீபத்திய உதாரணம்- நம் மீது இந்தியை திணிக்க முயன்றது.
.
சொன்னது : RSS ஒழுக்கத்தை கடுமையாக வலியுறுத்தும் இயக்கம்.
.
சொல்லாதது : பிரச்சாரக்குகளின் காம லீலைகள். உளவியல் ரீதியாக, தினிக்கப் படும் எந்த காரியமும் செயலும் வலுவான எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும். காதலும் காமமும் இயற்கையான உந்துதல்கள் (basic instict) முறையான பருவத்தில் சரியான துனையை தேர்ந்தெடுத்து இல்வாழ்வில் இனைந்து அறிவுள்ள சந்ததிகளை சமுதாயத்துக்கு தருவதே இயல்பான வாழ்வு முறை. மதங்களின் கண்டுபிடிப்பான சன்னியாசம் என்பது காம கேடி ஜெயேந்திரன் போன்ற அயோக்கியர்களையே உருவாக்கும்.
.
சொன்னது : RSS மதஅடிப்படை இயக்கம் அல்ல கலாச்சார சமுதாய இயக்கம்.
.
சொல்லாதது : இது முழு பூசனிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சி. RSS ஆன்மீகத் தேடலை வலியுறுத்தாதது என்னவோ உண்மை தான் ஆனால் மதம் என்னும் நிறுவனத்தை வலுவாக காப்பாற்றுவது அதன் existaceக்கு மிக அவசியம். ஏனென்றால் தனிப்பட்ட, உண்மையான ஆன்மீக தேடலின் உயர் நிலை கடவுள் மறுப்பு அது தேடுபவனுக்குள் பல கேள்விகள் எழுப்பும். கேள்விகள் தான் மதத்தின் மிகப் பெரிய எதிரி. ஆனால் ஆன்மீகம் நிறுவனமயம் ஆகும் போது மதம் ஆகிறது. மதம் என்னும் நிறுவனம் தன்னுடைய existenceஐ உறுதி செய்ய, தனக்கு எப்போதும் பிற நிறுவங்களால் (மதங்களால்) ஆபத்து என்று பிரச்சாரம் செய்து அதன் அடியார்களை(மக்களை) எப்போதும் ஒரு வித பயத்திலும் பதற்றத்திலும் வைத்திருக்கும். பயத்திலும் பதற்றத்திலும் ஆழ்ந்த மக்களே மதத்தை காப்பாற்ற வன்முறை போன்ற காரியங்களில் ஈடுபட முடியும்.இந்த இடத்தில் RSS வலியுறுத்தும் மதம் சார்ந்த இந்துத்துவ கலாச்சாரத்தை கவனியுங்கள். அவர்கள் வேலை மிக சுலபம். இந்துக்களுக்கும் அவர்கள் கலாச்சாரத்துக்கும் முஸ்லிம்களாலும் கிருஸ்தவர்களாலும் ஆபத்து என்னும் சிறிய பிரச்சாரம் கூட சுலபமாக மிகப் பெரிய கூட்டத்தை சேர்க்க உதவும்.
.
சொன்னது : RSS உள்நாட்டு சுதேசி பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் இயக்கம்.
.
சொல்லாதது : இல்லை. இல்லவே இல்லை. RSSன் சுதேசி இயக்கத்தின் தலைவரான குருமூர்த்தி ஒரு ஹைடெக் தரகர். corporate களுக்கும் அரச குடும்பங்களின் சொத்து தகராறுகளிலும் கட்டை பஞ்சாயத்துகள் செய்வது தான் அவரின் முக்கிய பணி. இடையிடையே சுதேசி பிலிம் காட்டுவது பொழுது போக்கு. கம்யூனிஸ்டுகளின் சுதேசி முழக்கத்தை நீர்த்து போகச் செய்வதும், மக்களை போலி-சுதேசம் பேசி குழப்புவதும் தான் SJMன் மறைமுக செயல் திட்டம்.
*****************************************************************************************************நன்பர்களே,
ஆக்டோபஸின் கரங்கள் வலுவாக நாடு முழுதும் பற்றியுள்ளது. உழைக்கும் வர்கமும், ஒடுக்கப் பட்டோரும், திராவிடர்கள் போன்ற மற்றைய தேசிய இனக் குழுக்களும் அபாயகரமானதொரு வலைப் பின்னலில் சிக்குண்டு கிடக்கிறார்கள். ஏகாதிபத்திய எதிர்ப்பும் தேசிய இனங்களின் சுயமரியாதை எழுச்சியும் இரு வேறு பாதைகளில் செல்வது இனியும் பலனளிக்காது என்றே எனக்கு தோன்றுகிறது. உங்கள் கருத்தையும், மேலே உள்ளவற்றில் ஏதாவது விடுபட்டிருந்தால் அதையும் சுட்டிக் காட்டுங்களேன்.
நன்றி

No comments:

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது