Friday, July 20, 2007

பாசிஸ்டின் நகைச்சுவை ஒன்று இதோ !

எம்.எல்.ஏக்கள் அவர்களாகவே முடிவு செய்துஓட்டுப் போட்டார்களாம்- ஜெ சொல்கிறார்.

ஜூலை 19, 2007 thatstamil

சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் ஓட்டளிப்பது தொடர்பாக தேதர்தல் ஆணையம் கொடுத்த குளறுபடியான விளக்கத்தால், அதிமுக எம்.எல்.ஏக்கள் அவர்களாகவே ஆலோசித்து, அவர்களாகவே முடிவு செய்து வாக்களித்துள்ளனர் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தலை 3வது அணி புறக்கணிக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென அதிமுக மற்றும் மதிமுக எம்.எல்.ஏக்கள் இன்று ஓட்டு போட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.

இந்நிலையில் வாக்குப் பதிவு முடியும் தருவாயில், ஜெயலலிதாவிடம் ஒரு விளக்க அறிக்கை வெளியாகியுள்ளது.

அதில் ஜெயலலிதா கூறியிருப்பதாவது, கடந்த 17ம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்ட உத்தரவில், குடியரசுத் தலைவர் தேர்தலில் ஓட்டளிப்பது அனைவரின் கடமை. இருப்பினும் ஓட்டளிப்பதும், ஓட்டளிக்காமல் இருப்பதும் அவரவர் இஷ்டம். மேலும், தேர்தலில் ஓட்டளிப்பதை கட்சித் தலைமையால் கட்டுப்படுத்த முடியாது என்றும் கூறியிருந்தது.

இந்த விவாதத்தை அடிப்படையாகக் கொண்டு அதிமுகவைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் மற்றும் மதிமுக எம்.எல்.ஏக்கள் அவர்களாகவே ஆலோசனை நடத்தி இறுதியில் தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை அடிப்படையாக் கொண்டு ஓட்டளித்துள்ளனர் என்று சுற்றி வளைத்து விளக்கம் அளித்துள்ளார் ஜெயலலிதா.

ஜெயலலிதாவின் இந்த அறிக்கை படு குழப்பமாகவும், வித்தியாசமாகவும் உள்ளது. அதிமுக உறுப்பினர்களை தன்னால் கட்டுப்படுத்த முடியாமல் போய் விட்டது என்று கூறியுள்ளாரா அல்லது தன்னுடன் ஆலோசிக்காமல், அவர்களாகவே முடிவெடுத்து விட்டனர் என்று அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது பழியைப் போடுகிறாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

மொத்தத்தில் அதிமுக இன்று அடித்த பல்டி சாதாரண பல்டி அல்ல. டபுள் அந்தர் பல்டி என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

No comments:

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது