Monday, August 27, 2007

எங்கு போராட்டம்,ஆர்ப்பாட்டம் என்றாலும் போலீஸ் தடியடி என்றால் யாருக்கானது இந்த அமைப்பு !!

..
'உத்தரப்பிரதேச மாநிலத்தில் அலிகாரில் உள்ள டிக்காரம் கன்யா கல்லூரியை சேர்ந்த மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து அலிகாரில் அந்தக் கல்லூரி மாணவிகள் நேற்று முன் தினம் ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைகின்றனர்.'

மக்கள் தாங்கள் பாதிக்கப்பட்டு போராட்டம் நடத்தினால் அது சம்பந்தமான அதிகாரி, தேர்ந்தெடுத்த எம்.பி., எம்.எல்.ஏ என்று யாரும் வருவதில்லை. போலீஸ்தான் வருகிறது.தடியடி நடத்தி சட்ட ஒழுக்கை நிலைநாட்டவென்று.

அப்படியானல் இந்த சட்டம் யாரை காப்பாற்றுகிறது? யாருடைய நலனுக்கானது? வெட்டவெளிச்சமானது, மக்கள் பாதிக்கப்பட்டதற்கு காரணமானவர்களின் நலனுக்கானது தான் .

மேற்கண்ட மாணவிகள் போராட்டத்திலும் யாரை காப்பாற்ற துடிக்கிறார்கள்.
Related:

No comments:

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது