Saturday, June 9, 2007

நமது நகரம் அவர்கள் ஆட்சி


அதிகாலையில் காய்கறி வாங்க மூன்று சக்கர சைக்கிளில் கோயம்பேடு செல்லும் முக்காடிட்ட ஆண்களுக்கு, அதே நேரம் உலாவுதற்கு மெரினா வரும் மாருதி மனிதர்களைத் தெரியாது.

'இந்து' பேப்பரின் குறுக்கெழுத்துப் போட்டியை காரிலிருந்தபடியே கண்க்கிடும் உயரதிகாரிகளுக்கு, பேருந்திலிருந்தபடியே பூ கட்டும் பெண்களைத் தெரியாது.
.
கஷ்டப்படும் உழைப்பாளிகளுக்கு ரஜினி படம் மகிழ்ச்சியைத் தருவதாகக் கூறும் கோடம் பாக்க முதலாளிகளுக்கு, தொடர்ந்து கஷ்டப்படுவதற்கே ரஜினி படம் உதவுகிறது என்பது தெரியாது.
..............................................................தெரிந்த சென்னையும் தெரியாத சென்னையும்

பொருளை விற்கும் விற்பனைப் பிரதிநிதிக்கு தனது நேர்மையையும் சேர்த்து விற்கிறோம் என்பது தெரியாது. பொய்மையும், நடிப்பும், வெற்று அரட்டையும், ஆத்திரத்தைச் சகிப்பதும் நாள் பட அவனது இரத்தத்தில் கலந்து போவதும் தெரியாது. நகரத்தில் வாழும் நடுத்தர வர்க்கத்தின் சிந்தனைப் போக்கிற்கு விற்பனைப் பிரதிநிதியின் வாழ்க்கை ஒரு வகைமாதிரி.

வறண்டு போன மாவட்டங்களிலிருந்து தினசரி நூற்றுக்கணக்கான சிறுவர்கள் சென்னையில் இறங்குகிறார்கள். பழைய பேப்பர் சேகரிப்பது முதல் கடற்கரையில் சுண்டல் விற்பது, தேநீர்க்கடைகளில் குவளை கழுவுவது, உணவகங்களின் மேசை கழுவுவது, வாகனம் பழுது பார்ப்பது, சிறுபட்டறை வேலை வரை எங்கும் விரவிக் கிடக்கிறார்கள்.


முழு கட்டுரை கிழே இணைக்கப்பட்டுள்ளது
***************************************************************
.
.
.
.

நன்றி புதிய கலாச்சாரம் பிப் 2000

No comments:

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது