Wednesday, June 27, 2007

செவியில் விழுந்து இதயம் நுழையும் இசை ! கோபுரத்தின் விரிசலில் விழுந்த விதை !

ஒரு சிறுகதை அல்லது நாவலை ஆளும் வர்க்க இலக்கியம், பெண்ணடிமைத்தனத்தை ஆதரிப்பது, சாதி ஆதிக்கத்தை நியாயப்படுத்துவது என்று விமரிசிப்பதை போல இசையை விமரிசிக்க முடிவதில்லை. ஒரு கவிதையை விமரிசிப்பதைப் போலக்கூட இசையை விமரிசிக்க இயலுவதில்லை. ஏனென்றால் கவிதை என்பது சொற்களால் தீட்டப்படும் மன உணர்வு; இசையோ ஒலியால் தீட்டப்படும் மன உணர்வு.

தன்னுடைய ராமன் மொம்மையை காவிரியில் தொலைத்து விட்டதற்காகத் தியாகய்யர் கண்ணீர் விட்டெழுதிய பாடல் 150 ஆண்டுகளுக்குப் பின்னும் கலைத்தரம் கொண்டதாக நீடிக்க முடியும் என்றால், நேற்று தாமிரவருணியில் முக்கிக் கொல்லப்பட்ட தொழிலாளர்களைப் பற்றிய பாடலில், ஏன் உணர்ச்சியும் கலைத்தரமும் இருக்க முடியாது? அவ்வாறு ஏன் இசையமைக்க முடியாது?

காதலைப் பாலியல் வெறியாகவும் மகிழ்ச்சியைக் களிவெறியாட்டமாகவும், துயரத்தை விரக்தியாகவும் மடைமாற்றி விடுவதன் மூலம் மக்களின் இசை ரசனையையும், வாழ்வியல் மதிப்பீடு களையும், அதனூடாகச் சமூக உணர்வையும் சிதைப்பதில் திரையிசை வெற்றி பெற்றுள்ளது.

நுகர்வோனை ரசிகனாக மாற்றுவதும், அடிமையை சுதந்திர மனிதானாக மாற்றுவதுமே நமது இலட்சியம். இதைச் சாதிக்க வேண்டுமெனில் வெகுசன ரசனையின் இசை மொழியை, அதன் தன்மையை நாம் அறிந்திருக்க வேண்டும். வெகுசன அடிமைத்தனத்தின் ஆன்மாவையும், விடுதலை வேட்கைக்கான அதன் மொழியையும் நாம் அறிந்திருக்க வேண்டும். இசை நுட்பங்களை கற்றுக் கொள்ள வேண்டும்.இது ஒரு கடினமான ஆனால் அவசியமான பணி.

நாம் காலத்தைக் கைப்பற்ற வேண்டியவர்கள். நம்க்குத்தேவை அதற்கான இசை. அந்த வகையில் நம்முடைய இசை நாம் வாழ்கின்ற காலத்தின் இசையில் குறுக்கிட வேண்டும். மக்களின் இதயத்தை வெல்ல வேண்டும். "புரட்சிப் போரின் ஒரு சிப்பாய்" தான் நமது இசைப் பாடல். சிப்பாய்க்குப் போரிடத் தெரிந்திருக்க வேண்டும் என்பதைச் சொல்ல வேண்டுமா என்ன?
..
-மருதையன்
..
இதன் முழு கட்டுரையும் கிழே க்ளிக் செய்து படிக்கவும்
****************************************************************
.
.

No comments:

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது