Sunday, August 19, 2007

உயர்ந்த சக்தி வேற யாரு ! இந்த உளவாளியை அனுப்பி வைத்த அமெரிக்காதான் !!

'சக்தி'யின் ஆதரவு எனக்கு உள்ளதுபிரதமராக நீடிப்பேன் - சொல்கிறார் மன்மோகன்
..
ஆகஸ்ட் 18, 2007
டெல்லி: உயர்ந்த சக்தியின் ஆதரவு எனக்கு உள்ளது. அந்த சக்தியின் விருப்பப்படி நான் பிரதமராக நீடிப்பேன் என்று கூறியுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.
..
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒருங்கிணைப்பாளரும், சமதாக் கட்சியின் தலைவருமான ஜார்ஜ் பெர்னாண்டஸ், அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக பிரதமரை கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். தனது பேச்சில், இதுவே சீனாவில் ஒரு பிரதமர் இப்படி நடந்திருந்தால் ஒரு தோட்டாவைக் கொண்டு நெற்றியில் சுட்டுக் கொன்றிருப்பார்கள் என்று கோபமாக கூறியிருந்தார் அவர்.
..
பெர்னாண்டஸின் பேச்சு நேற்று நாடாளுமன்றத்தில் பெரும் அமளியை ஏற்படுத்தியது. காங்கிரஸ் எம்.பிக்கள், பெர்னாண்டஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி அமளியில் ஈடுபட்டனர்.
..
இந்த நிலையில் நேற்று தொலைக்காட்சி ஒன்றுக்கு மன்மோகன் சிங் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், நான் பிரதமராக நீடிப்பதை எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை. சிலர் எனது சாவைக் கூட விரும்புகிறார்கள்.
..
ஆனால் உயர்ந்த சக்தியின் ஆதரவு எனக்கு உள்ளது. அந்த சக்தியின் விருப்பப்படி, எதிர்க்கட்சிகள் விரும்பாவிட்டாலும் நான் பிரதமர் பதவியில் நீடிப்பேன். அந்த தைரியமும், நம்பிக்கையும் எனக்கு உள்ளது.
Related :
..

No comments:

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது