Tuesday, August 28, 2007

ஜாமின் கொடுத்து கை குலுக்கி வாழ்த்து சொல்லி அனுப்பி வைக்கிறானுங்க ! இந்திய ஜனநாயகத்தின் யோக்கியதையைப் பாருங்க !!

புனே: எரவாடா சிறையிலிருந்து நடிகர் சஞ்சய் தத் ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்தபோது அவருக்கு கை குலுக்கியும், கட்டிப் பிடித்தும் வாழ்த்து தெரிவித்த 9 போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கி 6 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட சஞ்சய் தத், புனே அருகில் உள்ள எரவாடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதையடுத்து கடந்த வியாழக்கிழமை சிறையிலிருந்து விடுதலை ஆனார் சஞ்சய் தத்.

சிறையிலிருந்து சஞ்சய் தத் வெளியே வந்தபோது, அங்கு கூடியிருந்த போலீஸார், சஞ்சய் தத்தின் ரசிகர்களாக மாறி விட்டனர். அனைவரும் போட்டி போட்டு அவருடன் கை குலுக்குவதும், கட்டிப் பிடித்து ஆறுதல் சொல்வதுமாக இருந்தனர்.

Related:

எங்கு போராட்டம்,ஆர்ப்பாட்டம் என்றாலும் போலீஸ் தடியடி என்றால் யாருக்கானது இந்த அமைப்பு !!


சென்னை மாநகர போலீசு ஆங்கிலேய காலனியாதிக்கம் தந்த அவமானச் சின்னம்

No comments:

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது