Monday, August 20, 2007

உயிர்த்தெழு !



மெளனத்தை உடை.
மர உதடு திற
பேசு !
..
பூமியின் புன்னகையை
மீட்டுத் தரும்
வேட்கையோடு
..
முன்முளைத்த மரபுகளை
முறித்தெறியும் வேகத்தோடு
பேசு !
..
கலைகளின்
ஒப்பனைகளைக் கழற்றி
நிகழ்வின் காயங்களை
வலியின் கனத்தோடு
விவரி !
..
பூவெறிந்து
பாவெறிந்து
கண்ணீர் எறிந்து
..
கற்களைக் கரைக்கும்
முயற்சியைத் துற.
..
அர்த்தங்களின்
அடர்த்தி குறையாத
ஆவேசத்தோடு
வீசு சொற்களை!
..
வேர்வரை விழட்டும்
மடமைகள்
..
இயல்களைத்
தெரிந்து கொள்.
இசங்களைப்
புரிந்து கொள்
..
பேசு!
.
சீழ்பிடித்த
சிகரங்களின் உள்ளழுக்கை
உண்மை விரல்களால்
தொடு
..
முகவரிகளின்
அக வரிகளை ஆய்வு செய்
..
உன்னை
இயல்பாய் வெளிப்படுத்து
பேசு!
..
ஞானவெறி கொள்!
ஞாலவெளி பற.

-தீபன்
..
புதிய கலாச்சாரம் மே 2000

No comments:

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது