Monday, August 20, 2007

"நக்சல்பாரிகளின் கூட்டுப்பாடல்"

"காலியாய்க் கிடக்கிறது
அரிசிப் பானை
ததும்புகிற்து
விழிக்குடம்
இதயம் நோகிறது
தாயே உன்னை நான்
எப்படிக் காப்பாற்றுவேன்?
இனியும் நான்
இங்கே இருக்க முடியாது -
அதோ
மக்கள், படை செல்கிறது
மலைகள் அதிரும் ஒலிகேட்கிறது
மாட மாளிகை நொறுங்கும்
ஒலி கேட்கிறது
இனியும் என்னைக்
காத்திருக்க வைக்காதே
தாயே
நானும்
அங்கே போக வேண்டும்
விடியலைக் கீறிச்
சூரியனைக் கொண்டு வர!"

1 comment:

குமரன் said...

நல்ல கவிதை. எழுதியது யார்? என சொல்லவில்லையே!

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது